Tuesday 10 January 2017

தமிழனின் சாதனைகள் ஒரு ஆய்வு /TAMILANIN SAATHANAIGAL ORU AAIVU

தமிழனின் சாதனைகள்
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….
பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……!
கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?
மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?
அங்கோர்வாட்_கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல்_நடுவே_ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.
தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
தொல்காப்பியமும் #திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே
-
ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து………………. என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் …….உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.

மேலும் தமிழன் படைத்த சாதனை
பெங்களூரு: சென்னையில் பிறந்து 12ம் வகுப்பு வரை தமிழில் படித்த ஸ்ரீராம் சக்ரவர்த்தி தற்போது உலக தகவல் தொடர்பு துறையில் முக்கிய நபராக உயர்ந்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், நகரத்தை விட கிராமத்தில் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக செல்போனில் டயல் செய்து பேசத் தெரியாத கிராமவாசிகள் தற்போது டச்செல்போனில் அனைத்து விபரங்களையும் எளிதாக கையாளுகின்றனர். இந்த புரட்சிக்கு முக்கிய காரணம் பேஸ்புக்என்றால், அது மிகையில்லை. பேஸ்புக் அதாவது முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கு ஏற்றபடி, தீமையும் பெருகி வருகிறது. பிரபல நடிகர்-நடிகை மற்றும் அரசியல் வாதிகள் பெயரில் முகநூல் கணக்கு துவங்கி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகும் இந்த காலத்தில் பாதுகாப்புடன் கூடிய அவாமூஎன்ற தகவல் தொடர்பு அப்ளிகேசனை சென்னை தமிழர் ஸ்ரீராம் சக்ரவர்த்தி, ராம் மேனன் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி உள்பட உலகின் பல்வேறு இடங்களில் அவாமூக்கு” 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் பெங்களூரில், இதன் விரிவாக்கம் பணி நடைபெறுகிறது. அவாமூஆப் பயன் பாடுமற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக ஸ்ரீராம் சக்ரவர்த்தி தினகரன் நிருபரிடம் கூறியதாவது: சாதாரண கூலித் தொழிலாளி முதல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரிடமும் செல்போன் உள்ளன. அது போல் வாட்ஸ் ஆப், டிவிட்டர் போன்றவைகளில் தனிகணக்குகளும் வைத்துள்ளனர். செல்போன் நிறுவனங்களும் ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்வதால் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் பயன்பாடு குறைந்து விட்டன. இன்சூரன்ஸ், வணிக மற்றும் சர்வே பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வேலை யாட்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை பெறமுடியாமலும் விற்பனை விபரத்தை பற்றிய தகவல்களை பெற வேண்டும் என்றால் பல மணி நேரம் பலர் உழைத்தால் மட்டுமே விவரங்களை பெறமுடியும். ஆனால் அவாமூஆப்பயன்படுத்தினால், இதன் இணைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான நபர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து எளிமையாக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு சில நிமிடத்தில் வழங்கிவிடும். உலக அளவில் 7 ஆயிரம் நிறுவனங்களில் அவாமூ பயன்படுகிறது.

இந்தியாவில் 3 ஆயிரம் நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளன. செய்தி மற்றும் தகவல்களை விரைவாகவும் ஒருங்கிணைந்த தகவல்களையும் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு அவாமூ எளிதில் கிடைக்கச் செய்வதால், நேரம் மிச்சமாகிறது. அத்துடன் தலைமை பொறுப்பில் இருப்பவரின் உத்தரவுகள் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தனித்தனியாகவும் அதே நேரத்தில் ஒருவருக்கு அனுப்பிய உத்தரவு மற்றொரு நபர்களுக்கு தெரியாத வகையில் பாதுகாப்பாகவும் அவாமூமூலம் அனுப்பி வைக்கமுடியும் என்றார்.

புதுடில்லி : தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. இதனுடைய ஆண்டு விற்றுமுதல், 4.2 லட்சம் கோடி ரூபாய். 
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான லாரி பேஜ், நேற்று, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைத்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும், பிரதான நிறுவனமாக, 'ஆல்பபெட்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை, லாரி பேஜ் உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையை, 43, நியமித்தார். 

வெளிநாடு வாழ் தமிழர் சாதனை - ஒரு பெரிய கார் நிறுவனத்தின் தில்லுமுல்லையே கண்டுபிடித்துள்ளார்.
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம்தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தைபிரத்யேக சாப்ட்வேரின் மூலம்  குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது. இந்த முறைகேட்டை,  தமிழரான டாக்டர் அரவிந்த் திருவேங்கடம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு  கண்டுபிடித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம் அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் ரிசர்ச் அசிஸ்டெண்ட் புரோபெஸ்சராக உள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். ஒரு நாள்சக பேராசிரியருடன் இணைந்து வோக்ஸ்வேகன் காரை டெஸ்ட் ட்ரைவ்  செய்திருக்கிறார்கள். அப்போதுஅந்த சாப்ட்வேரின் குளறுபடியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட டீசல் கார்களில்மாசு கட்டுப்பாட்டு அளவைசாப்ட்வேர் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது எனஇ.பி.ஏ., (சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை)  எச்சரிக்கை விடுத்துள்ளன.

கார் வெளியிடும் புகையில்காரீயத்தின் (Lead) அளவை குறைத்துக் காட்டுவதற்கென,  தனி சாப்டவேரை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது.  இதனால்மாசு கட்டுப்பாடு சோதனையில் வோக்ஸ்வேகன் கார்கள் வெற்றிகரமாக தேறிஅதற்கான சான்றிதழுடன்,விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக்,நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் உள்ளன. இவைசிறிய அளவில் காற்றில் கலந்தாலே ஆபத்தை விளைவிக்குமாம்.

வோக்ஸ்வேகனின் கார்கள் உட்படஆடிஸ்கோடா மற்றும் சீயட் போன்ற கார்களிலும் வோக்ஸ்வேகனின்  தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அரவிந்த் சார் கொஞ்சம் இந்தியா  பக்கம் வந்து  அனைத்து நிறுவனத்தின் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்க. நம்ம இந்தியாவில் சொல்லவா வேணும். 
மலேசிய தமிழர்கள் மோகனதாஸ் மனோகரனின் எவரெஸ்ட் சிகரம் ஏறியதையும் குறிப்பிடலாம்